Tuesday 6 December 2011

இது மலர் பேசும்…மௌன மொழி…


உன் வீட்டுத் தோட்டத்தில் 
உனக்காகப் பூத்திருந்தேன்
என்னை ஏன் 
பொசுக்கென்று பறித்து
பூஜை அறையில்
வைத்துவிட்டாய் ?
                                                           .
அன்பே !,நான்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னை இறைவனடி சேர்த்து
விடுகின்றாயே !

இதற்காகவா
இன்னொரு பிறவி எடுத்து
உன் வீட்டுத் தோட்டத்தின்
முற்றத்தில் பூத்திருந்தேன் ?

உன் கார் கூந்தலைச் 
சேர்வதற்கே
காத்திருந்த என்னை
மீண்டும் கடவுளின்
காலடியில் சமர்ப்பித்து
விட்டாயே !..

கதறுகிறேன் நான் !
கண்களை மூடிக்கொண்டு
தியானிக்கின்றாய் நீ !

பூஜை அறையில் நீ வணங்குவது
இறைவனை அல்ல ! – என்
பூத உடலுக்கு இறுதியஞ்சலி
செலுத்துகின்றாய் !..
 
என்னுயிர் ஊசலாடிக்
கொண்டிருக்கிறது...
நான் கருகிப் போவதற்குள்
உன் கார் கூந்தலில்
என்னைச் சூடிக்கொள் !
எனக்கு மோட்சம் கொடு! …

No comments:

Post a Comment