Tuesday 6 December 2011

குல சாமி

என்ன தவம் செய்தேனோ !
உன் மகனா நான் பிறக்க
என்ன பாவம் செய்தாயோ
என்னை நீ ஈன்றெடுக்க …

என்னை நீ கரை சேர்க்க
எத்தனையோ பாடுபட்டும்
என்னதான் சுகத்தக் கண்டே
என்னப்பெத்த ஆத்தாவே ? ! …

கருவரையில் குடியிருக்கும்
கருமாரி சாமிகூட
காரியத்தை நிறைவேத்த
காசு பணம் கேட்கையில
கருச் சுமந்தக் கூலியின்னு
நீ ஒன்னும் கேட்கலையே !

ஒரு பயனும் இல்லையின்னு -நீ
உள்ளூற அறிஞ்சிருந்தும்
உன் உதிரத்தைப் பாலாக்கி
உணவாகத் தந்தாயே !
இதுபோல ஒரு மனசு
யாராத்தா உனக்குத் தந்தா?

உன்னைப் பத்தி ஒரு வார்த்தை
உண்மையாகச் சொல்லப் போனா
கோயிலில கொழுவிருக்கும்
சாமியெல்லாம் சாமியல்ல !
உண்மையான சாமி நீதான்
உயிர்காக்கும் குலசாமி …

No comments:

Post a Comment