Friday 16 December 2011

இது கவிதை அல்ல !...


இலக்கியத்தில் உனக்குப்
பிடித்தது கவிதை என்பதால்

இரவெல்லாம் உறங்காமல்
நான் யோசித்து யோசித்து
கிறுக்கிய கிறுக்கல்களே தவிர
இது கவிதையல்ல !

காளிதேவியின் அருளால்
கவிபாடியக் காளமேகப்
புலவனைப் போல் உன்
கடைக்கண் பார்வைப்
பட்டதும் நான் பிதற்றிய
பிதற்றல்களே தவிர
இது கவிதையல்ல !

படிக்காமல் தேர்வு எழுதிய
ஒரு பள்ளிச்சிறுவன் போல்
பயந்துகொண்டே உன்னிடம்
சமர்ப்பிக்கிறேன் ..

நீ பிடிக்கவில்லை என்று
பிழை திருத்தம் செய்யவோ,
நன்று! என நலம் பாராட்டவோ
இது ஒன்றும் கவிதையல்ல !

உன் மீது எனக்கிருக்கும்
உணர்வைச் சொல்ல என்
தூக்கத்தைத் தொலைத்து
எழுதியத் தூது சருக்கம் ! ...

No comments:

Post a Comment